தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் என்னை பாதித்த ராஜபக்சேவின் அதிபர் பதவியும் ,அதனால் உருவான சிறு கவிதையையும் பகிர்ந்து கொள்கிறேன்.
கவிதையெல்லாம் எழுத தெரியாத என்னால் உங்களுக்கு ஏற்படும் சிரமத்திற்க்கும் சிரமேர்கிறேன்..ஆனால் யாரோ ஒருவரின் மனதில் சிறு கீறலை இக்கவிதை ஏற்படுதுமாயின் ஆகமகிழ்வேன், அடக்குமுறைகளை ஒடுக்க நினைக்கும் ஒருவர் என் கவிதையை படித்தார் என்று....
நன்றி
குண்டு மழையினால்
குருதி வெள்ளம்.
நடப்பவைகளை யுகித்தறிய முடியதாயாத மழலைக்கு
உணர்த்த வேண்டிய பெற்றோரும் சடலங்கலாய்,
அழுது வீங்கிய ஈர கன்னங்களில் தரப்பட்ட திடீர் முத்ததையும்,
குருதி கரை படிந்த கைகளில் தரபட்ட இனிப்பையும் பொருட்படுத்தாது,,
மீண்டும் அதிபாராய் உலா வந்து கொண்டிருக்கும் ராஜபக்சேவைசெய்வதறியாது வெறித்து கொண்டிருந்தாள் அந்த ஈழ சிறுமி!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment