Saturday, June 19, 2010

காட்டு வேட்டை

அடக்குமுறை தாளாமல்
கொதித்தெழுந்து கொன்றபின்
ஜார்ஜ் ராய்* பாவமென்றும்,
இது அஹிம்சை நாடென்றும்
அலறி துடிக்கின்றன
முதலாளித்துவ ஊடகங்கள் ........

திரைக்கு வந்து
சில வாரங்களே ஆன
புத்தம் புதிய திரைப்படங்களை
ஒளிபரப்புவதை போல
காட்டு வேட்டையை
ஒளிபரப்ப மாட்டார்கள் ..
இந்திரா, ராஜீவ் பட்டியலில்
தன்னையும் மாவோஸ்ட்கள்
சேர்த்து விடுவார்கள்
என்று ப.சிதம்பரம் அறியாதவரா என்ன??

உயிர் வாழ்வதற்கு கூட
துப்பாக்கி தோட்டாவை
எங்கள்
அப்பாவி பழங்குடி மக்களை
துரத்தியடிக்கும்
இந்திய ராணுவத்தை ,
பழங்குடி மக்களின் வாழ்வுகாக
நோக்கி மாவோஸ்ட்களின்
தோட்டாக்கள் காரிஉமிழும்
காட்சியை ஓளிபரப்ப
தைரியம் உள்ளதா உங்களிடம்?

இருந்தாலும் ஒளிபரப்பி விடாதீர்கள்!!!
முதலாளித்துவத்தின் மூக்கு கண்ணாடியினூடே
உழைக்கும் மக்களை பார்க்கும்
உங்கள் கண்களை நோக்கி
ஈட்டிகள் பாயும் நாள்
வெகு தொலைவில் இல்லை!!
*ஜார்ஜ் ராய்:மனித வள மேம்பாட்டு அதிகாரி என்ற போர்வையில் இருந்து உழைக்கும் மக்களை சுரண்டியதால்,கொள்ளப்பட்ட மிருகம் ...












No comments:

Post a Comment